ஹைதராபாத்: உலக கோப்பை பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இரண்டவாது சுற்றுக்கு போட்டிக்கு இந்தியாவின் பருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றுள்ளார்.உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பருபள்ளி காஷ்யப், ஈரானின் அலி ஷா ஹுசைனியை எதிர்கொண்டார்.இதில் சிறப்பாக விளையாடிய காஷ்யப் 21-9, 21-13 என்ற செட்களில் வென்றார். அவர் இரண்டாவது சுற்றில் சீனாவின் ஜின் சென்னை எதிர்கொள்கிறார்.நேற்று நடந்த மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் அரவிந்த் பட் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் 14-21, 21-19, 22-24 என்ற செட்களில் சீன தைபெயை சேர்ந்த ஹிசின் ஹிசேவிடம் தோற்றார்.சாய்னா நம்பிக்கை...இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், ரஷ்யாவின் அனஸ்டாசியா பிரகோபென்கோவை சந்திக்கிறார். சமீபத்தில் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டார். இத்தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என சாய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.