பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியைத் தழுவினார்.
சாய்னா நேவால் அரையிறுதிப் போட்டியில் உலகின் 8-ம் நிலை வீரரான தாய்லாந்து வீராங்கனை இன்டானோன் ரட்சனோக்கை எதிர்கொண்டார். இதில் 15-21, 19-21 என்ற செட்கணக்கில் சாய்னா போராடித் தோல்வியடைந்தார்.
இன்டானோனிடம் 3-வது முறையாக சாய்னா தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்பு 2011-ல் சுதிர்மேன் கோப்பை கடந்த ஆண்டு சூப்பர் சீரிஸ் பைனல் போட்டி ஆகியவற்றிலும் சாய்னாவை இன்டானோன் வென்றுள்ளார்.
