மலேசிய ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சாய்னா நேவால் ஹாங்காங்கின் பூய் இன் இப் என்பவருடன் நேற்று மோதினார். ஆட்டம் துவங்கியது முதலே சாய்னா சிறப்பாக ஆடி ஹாங்காங் வீராங்கனையை நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த போட்டியில் சாய்னா 21-12, 21-9 என்ற கணக்கில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலாலம்பூரில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் சாய்னா ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவுடன் மோதுகிறார். உலகத் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாய்னா 33வது இடத்தில் இருக்கும் நொசோமியுடன் இதுவரை மோதியதே இல்லை.
Story first published: Friday, January 18, 2013, 11:24 [IST]
Other articles published on Jan 18, 2013


Click it and Unblock the Notifications