டெல்லி: துபாயில் நடக்க உள்ள சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் பைனல்ஸ் போட்டிக்கு, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளனர்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரிஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நடக்க உள்ளது. டிசம்பர் 13 முதல் 17ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில், உலகின் தலை சிறந்த 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.