லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 25-11 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை வைதேகி சௌத்ரியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தநிலையில், இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் பிட்ரியானியை எதிர்கொண்டார் பி.வி.சிந்து.
இதில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து, 21-11, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் க்ரிகோரியா மரிஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார் பி.வி.சிந்து.