
வெண்கலப் பதக்கம் வென்ற தத்
ஓலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யோகேஷ்வர் தத். இந்த நிலையில் அல்கா லம்பா தனது டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசும்போது எடுத்த படத்தை வைத்து டிவீட் போட்டிருந்தார். அதில் சங் பரிவார அமைப்பைச் சேர்ந்த அனைவருமே விஷ வித்துக்கள் என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார்.

கோபத்துடன் வாக்குவாதம்
இதனால் கோபமடைந்த யோகேஷ்வர் தத், அதற்குப் பதில் கொடுத்தார். அதில், உங்களது பிறப்பும், வளர்ப்பும் உங்களது மனநிலையிலிருந்தே தெரிய வருகிறது. நீங்கள் போட்டுள்ள போட்டோவில் உள்ளவர் இந்த நாட்டு மக்களால் நேசிக்கப்படுபவர். இந்த நாட்டை நேசிப்பவர். அதை நீங்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும். நாடு அவருக்குத் துணையாக நிற்கிறது. ஆனால் உங்களைப் போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட சிலர் மட்டுமே விலகி இருக்கிறீர்கள் என்று சாடியிருந்தார்.

அல்காவின் அதிர்ச்சி டிவீட்
இதைப் பார்த்து ஆவேசமடைந்த அல்கா லம்பா, உங்க அப்பா, அம்மாவைப் பற்றி எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது என்று கூறப் போக தத்தும் விடவில்லை. சமூக வலைதளங்களில் கொஞ்சம் கூட நாகரீகத்தைப் பேணாத ஒருவரிடம் அதை எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தார். இதை வைத்து இரு தரப்பும் மோதிக் கொண்டதால் டிவிட்டர் தளமே ஆடிப் போய் விட்டது.

யோகேஷ்வர் தத் கடும் சாடல்
மேலும் அவர் கூறுகையில் ஷேம் ஆன் அல்கா லம்பா என்று ஹேஷ்டேக் போட்டு ஏதாவது பேசினால் உடனே தாயாரை அவமானப்படுத்துகிறீர்கள்.. அல்லது பிரதமரை அவமானப்படுத்துகிறீர்கள்.. அதுவும் இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து என்று அந்த டயலாக்கை எடுத்து விடுவீர்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார் யோகேஷ்வர் தத்.


Click it and Unblock the Notifications











