பதக்க விழாவை சரிதா தேவி புறக்கணித்திருக்க வேண்டும்: "தங்க தாரகை" மேரிகோம்
டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதிய இந்திய வீராங்கனை சரிதா தேவி பதக்க விழாவையே புறக்கணித்து இருக்கவேண்டும் என்று குத்துச் சண்டையில் தங்கம் வென்ற மேரி கோம் கூறியுள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சரிதா தேவி, நடுவர் தனக்கு தவறான தீர்ப்பு அளித்தார் என்று கூறி பதக்கமளிப்பு விழாவில்,பதக்கத்தை கழுத்தில் அணிந்து கொள்ளாமல், கண்ணீர்விட்டு அழுதவாறு கையில் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்து உள்ள குத்துச் சண்டையில் தங்கம் வென்ற மேரி கோம், சரிதாவுக்கு நடந்தது வருத்தமளிக்கக் கூடியதே. எதிர் காலத்திலும் இதுபோல நடக்கக் கூடாது என்று கூறினார்.
மேலும் சரிதா தேவி பதக்கத்தைக் கையில் வாங்காமல் அந்த விழாவையே புறக்கணித்து இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications