குவஹாத்தி: உலக மகளிர் இளையோர் குத்து சண்டை போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உலக மகளிர் இளையோர் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றன.
இதில்
48 கிலோ எடைப் பிரிவில் நீது
51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா
54 கிலோ எடைப் பிரிவில் சாஷி செளத்ரி
57 கிலோ எடைப் பிரிவில் சசி சோப்ரா
64 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ
ஆகியோர் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை அள்ளினர்.
ஏற்கனவே நேஹா யாதவ், அனுபமா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களுடன் வெளியேறினர். இதுவரை மொத்தம் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.