Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1983 இந்திய அணியே சிறந்தது.. ரோகித் சர்மா தலைமையிலான அணிலாம் ஒன்னுமே கிடையாது.. சொல்றது யாரு பாருங்க

அகமதாபாத்: தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் போது 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இந்திய அணி ஒரு தோல்வி கூட இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

1983 World Cup winning team is the best Indian team says Sunil Gavaskar

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் 500 ரன்களுக்கு மேல் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 பவிலர்களும் 15 விக்கெட்டுகளுக்கு மேல் அசத்தியுள்ளனர். இதனால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதனிடையே இதுவரை உலகக்கோப்பை தொடரில் ஆடிய இந்திய அணியிலேயே, இப்போதைய அணிதான் வலிமையானது என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. இந்த அணியுடன் ஒப்பிட்டால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியின் வலிமை குறைந்தது என்றும், 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியினரின் பலம் இன்னும் குறைந்தது என்றும் ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், உலகக்கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் தொடர் முழுக்க இந்திய அணி மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வலிமையான அணி எது என்ற விவாதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய அணியை ஒப்பிட்டால் 1983ஆம் ஆண்டு இன்னும் வலிமையானது. ரோகித் சர்மா அணியை எங்களால் வென்றிருக்க முடியும் என்று கூறியுள்ளார். அதேபோல் அப்போதைய கிரிக்கெட்டில் 6 ஃபீல்டர்கள் 30 யார்ட் வளையத்திற்கு வெளியே இருப்பார்கள், அதேபோல் 2 புதிய பந்தில் தற்போதைய இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகிறார். இதில் மாற்றமடைந்தால், எந்த அணி பலம் வாய்ந்தது என்று முழுமையாக தெரியும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, November 17, 2023, 18:33 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+