வாய்ப்பு
ஆனால் கிடைத்த வாய்ப்பை கோட்டை விடுவதை என்ன வென்று சொல்வது. கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சினுக்கும் சரி, தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் சரி, அவர்களுடைய வாழ்க்கையே, நடுவரிசையிலிருந்த தொடக்க வீரராக புரோமோஷன் பெற்ற போது தான் மாறியது,இந்த நிலையில், கடந்த 5 போட்டிகளாக சொதப்பிய சூர்யகுமார் யாதவ்க்கு தொடக்க வீரர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சொதப்பல்
இதில், சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். ஆனால் இந்த 16 பந்தகளில் கிட்டதட்ட 3 முறை அவர் ஆட்டமிழந்து இருப்பார். அந்த வகையில், அவர் அடித்த பந்து எல்லாம் எதிரணி வீராகள் கேட்ச் பிடிக்கும் அளவிலேயே இருந்தது.
வரப்பிரசாதம்
டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் முதல் 6 ஓவரில் பவுண்டரி கோட்டில் மொத்தமே 2 வீரர்கள் தான் இருப்பார்கள். இதனால், பந்தை சரியாக தூக்கி அடித்தால் சிக்சர், பவுண்டரி என ரன்கள் கிடைக்கும். அதிரடியாக ஆடக் கூடியவர்களுக்கு அந்த வாய்ப்பு வரப்பிரசாதம் மாதிரி. ஆனால், அதனையும் சூர்யகுமார் பயன்படுத்தி கொள்ளவில்லை.
டக் அவுட்
இதே போன்று விராட் கோலி இல்லாததால் அந்த இடத்துக்கு ஸ்ரேயாஸ் மற்றும் தீபக் ஹூடா போட்டி போடுகின்றனர். சீனியர் என்ற அடிப்படையில் ஸ்ரேயா1 ஐயருக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் 4 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி விட்டார். இதனால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இவ்விருவருக்கும் இருந்து வாய்ப்பு கை நழுவி செல்கிறது.