
6 ஒருநாள் போட்டி
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரும் முடிந்து இரண்டு நாட்களிலேயே நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரும் நடைபெறுகிறது. இதனால் இந்திய அணி தொடர்ந்து ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால் டி20க்கு தனி அணியையும் ஒரு நாள் போட்டிக்கு தனி அணியையும் உருவாக்கும் முடிவில் தேர்வுக் குழுவினர் உள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு
இதனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக டி20 போட்டிக்கு செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய உள்ள பல சீனியர்கள் டி20 அணியில் விளையாட வாய்ப்பு இல்லை. அதற்கு பதிலாக ஒரு நாள் தொடர் தொடங்கியவுடன் சீனியர்கள் அணிக்கு திரும்ப உள்ளனர். டி20 அணியில் இஷான் கிஷன், ருத்துராஜ், தீபக் ஹூடா,தீபக்சாகர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனியர்களுக்கு ஓய்வு
எனினும் காயத்திலிருந்து குணமடைந்தாலும் அவர் அணிக்கு திரும்புவது அவசரம் காட்ட பிசிசிஐ விரும்பாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழு உடல் தகுதியை பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி இடம் பெறுவார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் டி20 அணியில் இடம் பெறுவது சந்தேகமே.

முக்கிய தொடர்
எனினும் அவர்கள் ஒருநாள் தொடருக்கு திரும்பி வந்துவிடுவார்கள். ஒரு நாள் தொடரும் முடிந்தவுடன் டி20 போட்டிகள் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. அதில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். அந்த தொடரும் முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் மிக முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.


Click it and Unblock the Notifications