மெல்போர்ன்: சுரேஷ் ரெய்னாவும், ரோகித் ஷர்மாவும், ஆட்டத்தை எங்கள் பக்கத்தில் இருந்து இழுத்து சென்றுவிட்டனர் என்று வங்கதேச கேப்டன் முஸ்ரப் மோர்டசா கூறினார்.
உலக கோப்பை காலிறுதியில், வங்கதேசம், இந்திய அணியிடம் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், அதன் கேப்டன் முஸ்ரப் மோர்டசா கூறியதாவது: வங்கதேசத்துக்கு இது ஒரு சிறப்பான உலக கோப்பை தொடராக அமைந்தது. 2008க்கு பிறகு நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதேயில்லை.

இருந்தாலும், மிக குறுகிய காலத்தில் வங்கதேச வீரர்கள், இந்த பிட்ச் மற்றும் சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொண்டு நாக்-அவுட் சுற்றுவரை முன்னேற உதவினர். இந்தியாவுக்கு எதிரான போட்டியை தவிர பிற போட்டிகளில் வங்கதேசம் சிறப்பாக ஆடியது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும், சில தருணங்களில் எங்கள் கை ஓங்கியிருந்தது. ஆனால், ரோகித் ஷர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ஆட்டத்தை எங்கள் கைகளில் இருந்து இழுத்து சென்றுவிட்டனர்.