நல்ல தொடக்கம்
இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 17 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு ஜோடியாக விளையாடிய செபாலி வர்மா, 33 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.
ஹர்மன்பிரீத் சிங் அரைசதம்
யாஷ்திகா பாட்டியா 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, ஜெமிமா 11 ரன்கள், தீப்தி சர்மா 1 ரன்கள் என மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் தனி ஆளாக போராடிய ஹர்மன்பிரித் கவுர் 34 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அலிசா ஹெலி டக் அவுட்டாகியும், பெத் மூனி 10 ரன்களிலும், கேப்டன் மேக் லென்னிங் 8 ரன்களிலும், தஹிலா மெக்ராத் 14 ரன்களிலும், ஹெய்னஸ் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா வெற்றி
இதனால் ஆஸ்திரேலிய அணி 49 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து போராடியது. எனினும் கார்டனர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஜோடி இணைந்து அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கார்டனர் 35 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து தனி ஆளாக, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனை ரெனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 31ஆம் தேதி சந்திக்கிறது.