
சரிவு
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை இரம் ஜாவித் டக் அவுட்டாகி வெளியேறினார் இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மஹ்ருப் மற்றும் முனிபா அலி பொறுப்புடன் விளையாடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், மஹ்ருப் 17 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு பாகிஸ்தான் மகளிர் அணி பெரும் சரிவை சந்திக்க தொடங்கியது.

99 ஆல் அவுட்
ஓமைமா 10 ரன்களிலும், ஆய்ஷா 10 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி அதன் பிறகு ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்டது. வெறும் 8 பந்துகள் இடைவெளியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 99 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த இன்னிங்சின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். இந்திய பந்துவீச்சு தரப்பில் ராணா, ராதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்மிருதி அதிரடி
இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தியது. செஃபாலி வர்மா சேவாக் போல் அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 16 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து மேக்னா 16 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

எகிறிய ரன் ரேட்
31 பந்துகளில் அரைசதம் விளாசிய மந்தானா, 42 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து இந்திய அணி 11.4வது ஓவரிலேயே,வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இதன் மூலம் மைனஸ் 0.56 என இருந்த இந்திய அணியின் ரன் ரேட் தற்போது 1.17 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்திற்கு சென்றது.


Click it and Unblock the Notifications











