
மனித உரிமை மீறல்
சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாகவும், சிறுபான்மை இஸ்லாமியர்களை சீனா சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் குவிந்தன. மேலும் மீ டூ புகார் அளித்த டென்னிஸ் வீராங்கனை பெங் சூயி மிரட்டப்பட்ட விவகாரமும் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அமெரிக்கா புறக்கணிப்பு
இந்த சம்பவங்களை கண்டித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியாக குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்தது. ஆனால் இந்தியா சார்பாக ஆரிஃப் கான் என்ற ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பங்கேற்கிறார். இதில் இந்திய அதிகாரிகளும் தொடக்க விழாவில் பங்கேற்க இருந்தனர்.

சீனா சீண்டல்
இந்த நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்லும் பொறுப்பு, ஃபாபிலோ என்ற சீன ராணுவ கமெண்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை கொன்ற சம்பவத்தில் தொடர்பு உடையவன் ஆவான். சீனாவின் இந்த செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா அதிரடி
மேலும் சீனாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியாக புறக்கணிக்க இந்தியா முடிவு எடுத்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவிலும் இந்தியா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க விழாவின் நேரலையை மத்திய அரசின் உத்தரவுப்படி தூர்தஷன் ரத்து செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











