சரிந்த விக்கெட்
பாகிஸ்தான் அணியில் முனிபா அலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, சிட்ரா அமீன் 11 ரன்களில் வெளியேறினார். கேப்டன் மிஸ்பா மகரூப் பொறுப்புடன் விளையாடி 35 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். ஓமைம்மா சோஹைல் டக் அவுட்டாகியும், அலியா ரியாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தது.
அரைசதம்
எனினும் மறுமுனையில் அதிரடியை காட்டிய நிடா டர், 37 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சில் தீப்தி சர்மா 3 விக்கெட்களும், பூஜா 2 விக்கெட்களும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சொதப்பல் பேட்டிங்
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை இந்தியா துரத்தியது. தொடக்க வீராங்கனை மேக்னா 15 ரன்களில் வெளியேற, ஸ்மிருதி மந்தானா 17 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா 2 ரன்களும், ஹேமலதா 20 ரன்களும், பிஜா 5 ரன்களும் எடுக்க இந்திய மகளிர் அணி தடுமாறியது.
பாகிஸ்தான் வெற்றி
அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்மான்பிரித் 12 ரன்களிலும், ராதா யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, ரிச்சா கோஸ் மட்டும் தனி ஆளாக நின்று 3 சிக்சர், 1 பவுண்டரி எடுத்து 13 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , முக்கிய கட்டத்தில் அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 19.4வது ஓவரில் 124 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.