
முகமது ஷமி
ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து அதிகபட்சம் 2 அல்லது 3 ஓவர்களை எதிர்பார்க்கலாம். இதனால் இந்திய அணிக்கு மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் நிச்சயம் தேவை என்ற முடிவுக்கு டிராவிட், ரோகித் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் அனுபவ வீரர் முகமது ஷமியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன்
இதே போன்று இந்திய அணியின் நடுவரிசையும் சற்று தடுமாறுகிறது. ஆசிய கோப்பையில் கூட ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா கூட்டணி சொற்ப ரன்களில் வெளியேறியது. இதனால் கூடுதல் வீரராக சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம். ஆஸ்திரேலிய ஆடுகளம், சஞ்சு சாம்சனின் பேட்டிங்கிற்கு ஏற்ற களமாக இருக்கும் என்று ரோகித் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

ஹர்சல் பட்டேல்
இது அனைவருக்கும் தெரிந்த வீரர் தான். ஆனால் ஆர்ஸ்தீப் சிங் இருப்பதால் ஹர்சல் பட்டேல் இந்திய அணியில் இருக்க மாட்டார் என்று பலரும் கணித்துள்ளனர். ஆனால் அது தவறு. ஹர்சல் பட்டேல் முழு உடல் தகுதியையும் பெற்றுள்ளார். இதனால் ஹர்சல் பட்டேல் கண்டிப்பாக டி20 உலககோப்பை தொடரில் இடம்பெறுவார்.

இந்திய அணி
பும்ரா காயத்திலிருந்து குணமடைந்த பிறகு கண்டிப்பாக அணிக்கு திரும்புவது உறுதி. இதனால், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஆர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல் என கண்டிப்பாக 5 வேகப்பந்துவீச்சாளர்களும், அக்சர் பட்டேல், அஸ்வின், சாஹல் என 3 சுழற்பந்துவீச்சாளர்களும், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் என 3 விக்கெட் கீப்பர்களும் இடம்பெற்றால், ரோகித், ராகுல், கோலி,சூர்யகுமார் என 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடம் சரியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications