
முதல் டி20
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நாளை நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி, ப்ளேயிங் 11 குறித்த ஆலோசனைகளையும் தொடங்கியுள்ளது. பேட்டிங் வரிசை ஓரளவிற்கு செட்டான போதும், பவுலிங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பவுலிங் சிக்கல்
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் டி20 உலகக்கோப்பையில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் முதன்மை தேர்வாக இருக்கிறார். புவனேஷ்வர் குமார் தன்னை நிரூபிக்க கடைசி வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவும் பவுலிங் செய்வார் என்பதால் மீதம் ஒரே இடம் தான் இருக்கிறது. இதற்காக தான் உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் என 3 பேர் போட்டி போட்டு வருகின்றனர்.

உம்ரான் மாலிக்
இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படுபவர் உம்ரான் மாலிக். ஏனென்றால் இந்திய அணியில் 150 + வேகத்தில் வீசக்கூடியவர் அவர் மட்டுமே இருக்கிறார். இதுவரை 3 போட்டிகளில் விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். இவரை இந்த தொடரில் இருந்தாவது பயன்படுத்த தொடங்கினால் தான் அடுத்த டி20 உலகக்கோப்பைக்குள் தயாராக முடியும்.

குழப்பம்
இதே போல இந்தியாவின் முன்னணி பவுலராக இருந்து வரும் ஹர்ஷல் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணியுடன் சென்று, வெளியிலேயே தான் இருந்தனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனையெல்லாம் யோசித்து ஹர்திக் பாண்ட்யா முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications