டெல்லி : தென்ஆப்பிரிக்க தொடருக்கு தயார்படுத்துவதற்காக 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த வீரர்கள் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், ஷேவாக்கின் பெயர் உத்தேச அணிக்கு கூட பரிசீலிக்கப்படவில்லை. மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக சில மாதங்களாக எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்புகிறார்.
அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச அணியில், தோணி, விராட் கோலி, ஷிகர் தவான், முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, விருத்திமான் சாஹா, நமன் ஓஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, ஹர்பஜன்சிங், இஷாந்த்ஷர்மா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, முகமது ஷமி, அக்ஷர் பட்டேல், பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா, மொகித் ஷர்மா, கரண் ஷர்மா, அம்பத்தி ராயுடு, தவால் குல்கர்னி, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உத்தேச அணி பட்டியலில் உள்ள இவர்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பெங்களூருவில் பயிற்சி முகாம் நடக்கிறது.