டாஸ் வென்றது
இந்த போட்டியில் முதல்முறையாக இந்தியா டாஸ் வென்று இருக்கிறது. ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்கத்திலேயே அவுட் ஆனார்கள். கோஹ்லி 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்தார்கள். இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் மட்டும் எடுத்தது.
பேட்டிங்
எளிதான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா ஆடியது. ஆனால் அந்த அணியின் மார்க்ராம் புவனேஷ்வர்குமார் பந்தில் தொடக்கத்திலேயே அவுட் ஆனார். வரிசையாக அனைத்து வீரர்களும் அவுட் ஆனார்கள். அம்லா மட்டும் அதிகமாக 61 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவுலிங்
இந்திய பவுலிங் தென்னாபிரிக்க பவுலிங் போலவே அபாரமாக இருந்தது. இந்தியாவின் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்தார். புவனேஷ்வர்குமார் 3 விக்கெட் எடுத்தார். இருவரும் ஸ்விங் மூலம் தென்னாப்பிரிக்காவை மிரட்டினார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங் சொதப்பியது. முக்கியமாக ஓப்பனிங் மோசமாக இருந்தது. அதேபோல் மிடில் ஆர்டரிலும் கோஹ்லி மட்டுமே 41 ரன் எடுத்தார். அதேபோல் ரஹானே 48 ரன் எடுத்து அவுட் ஆனார்.
சிறப்பு
அதிசயமாக இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். புவனேஷ்வர்குமார், சமி இருவரும் தென்னாப்பிரிக்க பந்துகளை தெறிக்கவிட்டார்கள். சமி வந்ததும் இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்தியா 2வது இன்னிங்சில் 247 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உள்ளது.