செஞ்சூரியன்: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்திருக்கிறது. இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

செஞ்சூரியனில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ்வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து இந்திய அணி பந்துவீசுகிறது.
இந்திய அணியில் ரஹானேவுக்குப் பதிலாக யுவராஜ்சிங் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.