
ஆதிக்கம் செலுத்திய இந்தியா
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது.ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது.

தொடர் வெற்றி
ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது போலவே டி-20 தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வருடம் நடக்கும் கடைசி போட்டியாகும் இது. கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும் இது.அதேபோல் இந்தூரில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என வென்றது.

136 இலக்கு
இந்தியா இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் மாநிலம் மும்பையில் உள்ள 'வான்கடே' மைதானத்தில் நடந்தது.இந்தியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். ஜெயதேவ் மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், குலதீப் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை இந்தியாவிற்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

வெற்றி
இந்த நிலையில் 136 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்தியா களம் இறங்கியது. சென்ற போட்டியில் செஞ்சுரி அடித்த ரோஹித் 27 ரன்களில் அவுட் ஆனார். இந்த நிலையில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேலும் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











