
அதிரடி
இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வருகிறார். ரோஹித் சர்மா ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும் இன்னொரு பக்கம் புஜாரா அவசரப்பட்டு ஆடி அவுட் ஆனார். அதேபோல் கோலி பதற்றத்துடன் களமிறங்கி டக் அவுட் ஆனார்.

எப்படி
அடுத்தடுத்து இரண்டு போட்டியில் கோலி இப்போதுதான் போல்ட் ஆகி உள்ளார். கடந்த இரண்டு வருடமாக கோலி பார்மில் இல்லை. இன்றும் கூட கோலி அவுட் ஆன பின் அதை கொஞ்சம் கூட நம்பவில்லை. நான் அவுட்டா என்பது போல கோலி பார்த்தார்.

கோலி
நடுவரை கொஞ்சம் கோபமாக கோலி முறைத்து பார்த்தார். இவர் போல்ட்தான் ஆனார். ஆனாலும் நடுவரும் பதற்றம் அடைந்து குழம்பி போனார். பெயில் தானாக விழுந்து விட்டதோ என்று நடுவர் குழம்பி போனார்.

நடுவர் குழப்பம்
கோலி முறைத்து பார்த்ததை பார்த்து குழம்பிய நடுவர் மூன்றாவது நடுவரிடம் விக்கெட் குறித்து கேட்டார். பந்து ஸ்டம்பை மோதியதா அல்லது கீப்பர் ஸ்டம்பை எடுத்தாரா என்று நடுவர் மூன்றாவது நடுவரிடம் கேட்டார். அதன்பின் விக்கெட் விழுந்தது உறுதியானது.

மீண்டும் இப்படி
கோலி இரண்டாவது முறையாக இப்படி அவுட் ஆகிறார். இவர் பார்ம் அவுட்டில் இப்படி கஷ்டப்படுவது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோலி மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் .


Click it and Unblock the Notifications