
கேஎல் ராகுல்
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஆக காத்திருக்கும் வீரர்களின் வரிசையில் முதன்மையாக இருப்பவர் கேஎல் ராகுல் தான். இதனால் தான் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்று கொள்வதற்கு ஏதுவாக கேஎல் ராகுலை துணை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது ராகுல் கேப்டனாக இருந்த போது இந்திய அணி ஒரு போட்டியில் கூட அவரது தலைமையில் வெற்றி பெறவில்லை. இதனால் ஜிம்பாப்வே தொடரில் ராகுல் எப்படி செயல்படுகிறாரோ, கேப்டனாக அவருடைய எதிர்காலம் அமையும்.

தீபக் ஹூடா
அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சு போன்ற திறமையால் இந்திய அணியில் தற்போது தீபக் ஹூடாவுக்கு இடம் கிடைத்துவிட்டது. அவ்வளவு என், சீனியர்கள் இடம்பெற்ற ஆசிய கோப்பை அணியிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில், ஒருநாள் அணியிலும் சரி, டி20 அணியிலும் சரி, இந்திய அணியின் நடுவரிசையில் நீண்ட காலமாகவே ஒரு நிலையான வீரர் இல்லை. தற்போது ஜிம்பாப்வே தொடர் மூலம் நடவரிசையில் தனது இடத்தை சிமெண்ட் போட்டு உறுதி செய்து கொள்ள ஹுடாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆவேஷ் கான்
கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை போல, சிறந்த பவுலரும், மோசமான பவுலருமாக செய்த கலவையாக விளங்குகிறார் ஆவேஷ் கான். ஆவேஷ் மீது ரோகித், டிராவிட் கூட்டணி அதீத நம்பிக்கை வைத்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் சொதப்பினாலும், கடைசி போட்டியில் ஃபார்மை மீட்டார். தற்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் எப்படி செயல்படுகிறாரோ என்பதை பொறுத்து தான் ஆவேண் கானின் எதிர்காலம் அமையும்.
Recommended Video

குல்தீப் யாதவ்
ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை தரும் சுழறபந்துவீச்சாளராக இருந்த குல்தீப் யாதவ் பிறகு, காயம், ஃபார்ம் அவுட் காரணமாக அணியில் தனது இடத்தை இழந்தார். தற்போது 12 மாத இடைவெளியின் 2 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், தனது மேஜிக் பந்துவீச்சு மூலம் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்ய ஜிம்பாப்வே தொடர் நல்ல வாய்ப்பாக அமையும்.


Click it and Unblock the Notifications