
இந்திய அணி முன்னிலை
கார்டிப்பில் நடந்த 2-வது ஆட்டத்தில் 133 ரன்கள் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 3-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

4வது ஒருநாள் போட்டி
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

குல்கர்னி
இந்திய அணியில் காயமடைந்த மொகித் ஷர்மாவுக்கு பதிலாக குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பயிற்சியின் போது காயம் அடைந்த இயான் பெல்லுக்கு பதிலாக காரி சேர்க்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுமே மும்முரம்
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணி கடும் முனைப்புடன் செயல்படும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும் என்பதால் இங்கிலாந்து அணி வெற்றிக்காக அனைத்து வகையிலும் போராடும்.


Click it and Unblock the Notifications











