
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட 5வது போட்டி வரும் ஜூலை 1ல் நடைபெறுகிறது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான படை இங்கிலாந்துக்கு 10 நாட்கள் முன்கூட்டியே சென்றுவிட்டது. இதற்கு காரணம் டிராவிட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு முக்கியமான போட்டியாக மாறியுள்ளதுதான்.

என்ன காரணம்
* இங்கிலாந்து அணி 2021ம் ஆண்டு இருந்ததற்கும், 2022ம் ஆண்டு இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
* ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலக, பென் ஸ்டோக்ஸ் புது கேப்டனாகியுள்ளார். அவர் பொறுப்பேற்றவுடன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்களிலும் அபார வெற்றி பெற்றது.
* குறிப்பாக அந்த அணி தடுப்பாட்டத்தில் இருந்து அதிரடிக்கு மாறியுள்ளது. இதற்கு உதாரணம் நியூசி,க்கு எதிரான 2வது டெஸ்டில் 299 என்ற இலக்கை மிக வேகமாக மாறியுள்ளது.

அனைத்து வீரர்களும் ஃபார்ம்
இங்கிலாந்து அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் படு சூப்பரான ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து ஜாஸ் பட்லர் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோரும் இணைவதால், அசுர பலத்துடன் கூடிய அணியாக உருவெடுத்துள்ளது.

மெக்கல்லமின் என்ட்ரி
இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல்-ல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ள அவருக்கு, இந்திய வீரர்கள் ஒவ்வொரின் பலம் மற்றும் பலவீனம் என்னவென்பது மிக நன்றாக தெரியும். இதுவே இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

இந்திய அணி பிரச்சினை
இந்திய அணிக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, இங்கிலாந்து பிட்ச்-களை புரிந்துக்கொள்வது தான். இதற்காகவே 10 நாட்கள் முன்கூட்டி சென்றுள்ளனர். எனினும் கடந்த மார்ச் மாதத்திற்கு பின் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடாததால், மீண்டும் அந்த வடிவ கிரிக்கெட்டிற்கு வீரர்கள் தயாராக வேண்டும்.


Click it and Unblock the Notifications