
தாக்கிய பந்து
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளுர் கிரிக்கெட் போட்டியில் போது சென் அபார்ட் வீசிய பந்து பவுன்ஸ் ஆனது. அப்போது பந்தை லீவ் செய்ய பிலிப் ஹியூஸ் முயன்ற போது, அவரின் பின் கழுத்தில் பந்து பட்டது. இதில் நிலைக்குலைந்து போன ஹியூஸ், அப்படியே மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

காலமானார்
உடனடியாக எதிரணியில் இருந்த வார்னர் உள்ளிட்ட வீரர்கள் பிலிப் ஹியூஸை மைதானத்திலிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர் மூளைக்கு செல்ல வேண்டிய நிரம்பு காயமடைந்ததால், அவர் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொண்டும், 2 நாளாக கண் விழிக்காமல் இருந்த பிலிப் ஹியூஸ் நவம்பர் 27ஆம் தேதி காலமானார்

இறுதிச்சடங்கு
பிலிப் ஹியூஸ் மரண செய்தியை கேட்டு அப்போதையே ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கதறி அழுதார். அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தது. பிலிப் ஹியூசின் இறுதிச் சடங்கில் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்றனர். 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, கோப்பையை பிலிப் ஹியூஸுக்கு சமர்பித்தது

63 நாட்அவுட்
பிலிப் ஹியூஸ் உயிரிழக்கும் போது அவர் எடுத்திருந்த ஸ்கோர் 63., இனி அவர் ஆட்டமிழக்கவே வாய்ப்பில்லை.இதனால் தான் 63 நாட் அவுட் என்ற வார்த்தை ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கவில்லை. பிலிப் ஹியூஸ் உருவப்படம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிலிப் ஹியூஸ் மரணத்திற்கு பிறகு ஹெல்மெட்டில் பல மாற்றம் கொண்டு வரப்பட்டு வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பந்து வீரர்கள் தலையில் பட்டால், உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, அவர் சரியாக இருக்கிறாரா என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஆட்டம் மிண்டும் தொடங்கப்படும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. 7 ஆண்டுகள் அல்ல, 700 ஆண்டுகள் ஆனாலும் பிலிப் 'ஹியூஸ் கிரிக்கெட் இருக்கும் வரை வாழ்வார்.


Click it and Unblock the Notifications











