
மோசமான பேட்டிங்
இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 344 ரன்கள் எடுத்தது. பின் மீண்டும் பேட்டிங் இறங்கிய இலங்கை அணி 126 ரன்களுக்கு அவுட் ஆனது.

அவுட்
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பிரைஸ்டோ மெண்டிஸ் போட்ட 10வது ஓவரில் சிக்ஸ் அடித்தார். இந்த பந்து பவுண்டரி லைனை தாண்டி பறந்து சென்றது.

பெயிண்ட்
மைதானத்தில் கோடு போடுவதற்காக வைத்து இருந்த பெயிண்ட் டப்பாவில் பறந்து சென்று இந்த பந்து விழுந்தது. இதனால் சிவப்பு நிற பந்து மொத்தமாக வெள்ளை நிறத்திற்கு மாறியது. கிரீஸ் லைனில் கோடு போடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த பெயிண்ட் ஆகும் இது.

மாறியது
வெள்ளை பெயிண்டில் மூழ்கிய அந்த பந்தை அங்கு இருந்து வீரர் ஒருவர் எடுத்து துணியில் துடைத்தார். ஆனால் துணியில் துடைத்த பின்பும் கூட அந்த பந்து வெள்ளை நிறத்திலேயே இருந்தது. இதை பார்த்ததும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி வீரர்கள் அதிர்ந்து போனார்கள்.

டெஸ்ட்
டெஸ்ட் போட்டியில் வெள்ளை பந்தை வைத்து ஆட முடியாது. இதனால் உடனே புதிய சிவப்பு பந்து எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் மைதானத்தில் சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போட்டியின் போது மைதானத்திற்குள் ராட்சச உடும்பு ஒன்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications