டெஸ்ட் போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வரும் பிப்.24ம் தேதி நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மோதிரா ஸ்டேடியத்தில் தொடங்கும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.
மைதானம்
மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு மறுசீரமைப்புக்காக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 பேர் வரை அமரக்கூடிய இது உலகின் மிகப்பெரும் ஸ்டேடியம் ஆகும். மேலும் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டிதான் மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.
வந்தே மாதரம்
மைதானம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், அங்கு போடப்படும் உள்ளூர் பாட்டுகள் பயிற்சியை முடிக்க உதவுகிறது என தெரிவித்துள்ளார். அங்கு வீரர்களின் பயிற்சியின் போது வந்தே மாதரம் பாடல் போடப்பட்டிருந்தது.
பண்ட்
மைதானத்தின் பயிற்சி கூடத்தில் கோலி, அக்ஷர் பட்டேல், ஹர்த்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் புகைப்படம் வெளியிட்டுள்ள ரிஷப் பண்ட் புது மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வது சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று ஹர்த்திக் பாண்டியாவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.