
அதிரடி ஆட்டம்
இதையடுத்து முதலில் களம் இறங்கிய திஷா கிரிக்கெட் அகாடமி மிகவும் அதிரடியாக ஆடியது. 20 ஓவர் முடிவில் இந்த அணி 156 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பியேர்ல் கிரிக்கெட் அகாடமி பேட்டிங் பிடிக்க களம் இறங்கியது.

சிறப்பான பந்து வீச்சு
ஆனால் அந்த அணி தொடக்கத்தில் இருந்து திணற தொடங்கியது. திஷா கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி என்ற 15 வயது சிறுவன் மிகவும் சிறப்பாக பந்து வீசினான். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் எடுத்தான்.
தொடர்ந்து விக்கெட் மழை
அதேபோல் அதற்கு அடுத்த இரண்டு ஓவர்களிலும் 2 விக்கெட் எடுத்தான். அதேபோல் நான்காவது ஓவரில் முதல் மூன்று பால்களில் தொடர்ந்து விக்கெட் எடுத்து ஹாட் டிரிக் சாதனை படைத்தான். பின் கடைசி பாலில் 1 விக்கெட் எடுத்து மொத்தமாக எதிரணியை சுருட்டினான்.

36 ரன்களில் சுருண்டது
இந்த சிறுவன் இந்த நான்கு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிரணி 36 ரன்களில் மொத்தமாக சுருண்டது. இதையடுத்து இந்த சிறுவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டான். எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











