ஒத்த ஆட்டம்..!! ஒட்டுமொத்த பாகிஸ்தானையே பேச வைச்சிடுச்சே...!! அணி நிர்வாகத்தில் வருகிறது மாற்றம்?
Recommended Video
இஸ்லாமாபாத்: உலக கோப்பையில் மோசமான பார்ம் காரணமாக, பாகிஸ்தான் அணி நிர்வாகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக, பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், அணி மேலாளர் தௌலத் அலி, பவுலிங் பயிற்சியாளர் அசார் மெஹமூத் உள்ளிட்ட பல கிரிக்கெட் அணி நிர்வாகிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் லாகூரில் நடைபெறவுள்ளது. அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதற்காக பாகிஸ்தான் அணியின் நிர்வாக இயக்குநர் வாசிம் கான் தனது சுற்றுப் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்புகிறார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக அந்நாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications