For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கு..ஆஸி ஒருநாள் அணியில் மிரட்டல் வீரர்கள்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை : இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ரன் குவிப்புக்கு சாதகமான மைதானமாக விளங்கப்படும் மும்பை வான்கடேவில் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள மேக்ஸ்வெல் களம் காண்கிறார்.

இதேபோன்று மிச்சல் மார்ஸ் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பலமாக உள்ளது

பலமாக உள்ளது

இது குறித்து பேசிய அவர் ஆஸ்திரேலிய ஒரு நாள் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவுக்கு வந்து ஒருநாள் தொடரில் விளையாடும் அணிகள் படுதோல்வியை சந்திக்கும். ஒரு தலைப்பட்சமாக முடிவு அமைவதால் போட்டியில் எந்த விறுவிறுப்பும் இருக்காது.ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணி பலமாக இருக்கிறது.

கடும் சவால்

கடும் சவால்

இதனால் ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டம் அமையும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு கடும் சவால்களை முதல்முறையாக கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் நான் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறனே தவிர கண்டிப்பாக நடக்கும் என எனக்கு தெரியாது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணி எந்த மாதிரியான கள சூழலில் விளையாடுகிறார்கள் என நம்மால் கணிக்க முடியாது.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

எனவே ஒரு நாள் தொடரை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய அவ்வளவு ஒரு நல்ல வீரர்களை கொண்டிருக்கிறார்கள். மிட்செக் ஸ்டாக், ரிச்சர்ட்சன் போன்றோரெல்லாம் நல்ல பார்மில் இருக்கிறார்கள். பாட் கம்மின்ஸ், சென் அப்பார்ட், ஆடம் சாம்பா போன்ற வீரர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்.இதேபோன்று நீங்கள் பேட்டிங்கை எடுத்துக் கொண்டாலும் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

மேக்ஸ்வெல் காயத்திலிருந்து தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ளார்.

பேட்டிங் பலம்

பேட்டிங் பலம்

இதேபோன்று லாபஸ்சேன், ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இது தவிர தொடக்க வீரராக இருக்கும் டேவிட் வார்னர், வெள்ளை நிற பந்தை அடித்து சிவப்பாக ஆக்க கூடியவர். அந்த அளவிற்கு அபாயகரமான வீரராக அவர் இருக்கிறார். இதை தவிர்த்து ஆஸ்திரேலியா அணியில் அதிரடி ஆல்ரவுண்டர்கள் கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹேட், ஜாஸ் இங்கிலீஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற மிரட்டலான வீரர்கள் இருக்கிறார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நடப்பு ஆண்டு 50 ஒரு உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் இது ஆஸ்திரேலியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது.

Story first published: Friday, February 24, 2023, 13:46 [IST]
Other articles published on Feb 24, 2023
English summary
Aakash chopra on australia odi series vs india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+