
கொரோனா
சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6ம் தேதி நாடு திரும்பியது. தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இலங்கை யோசனை
இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னெச்சிரிக்கையாக இலங்கை ஏ அணி ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறது. வரும் ஜூலை 18ம் தேதிக்குள் நிலைமை சீராக விட்டால் இந்திய ஏ அணியுடன் இலங்கையின் ஏ அணி தான் விளையாடும் என கூறப்படுகிறது.

இலங்கை ஏ அணி
இந்நிலையில் அந்த போட்டியினால் எந்தவித பயனும் இல்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து - இலங்கை தொடரை பார்த்தால், அந்நாட்டின் முதல் தர அணியே மிகவும் பலவீனமாக உள்ளது. அது குறித்து யோசித்து பாருங்கள். 2ம் தர அணியுடன் போட்டியை நடத்தினால் எப்படி இருக்கும்.

சுவாரஸ்யமே இருக்காது
இந்திய ஏ அணிக்கு எதிராக இலங்கையின் முதல் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கையின் ஏ அணியை களமிறக்கினால் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமுமே இருக்காது. ஏனென்றால் இலங்கையின் மெயின் அணியை விட இந்தியாவின் ஏ அணி பலமானது ஆகும் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











