டால்மியா-கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமார் 'தனி அறையில்' ஆலோசனை!
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் ஜக்மோகன் டால்மியாவுடன் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் நீரஜ்குமார் நேற்று தனி அறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஒருநாள் போட்டி தொடரை இழந்து கடும் விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியுடன் சென்றிருந்த கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் நீரஜ்குமார் நேற்று நாடு திரும்பி மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவை தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை; மேலும் இதில் விவாதிக்கப்பட்டது என்ன என்பது குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை.
Story first published: Friday, June 26, 2015, 14:03 [IST]
Other articles published on Jun 26, 2015


Click it and Unblock the Notifications