மும்பை : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்திய விதத்தை ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாகவே சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இதில் பல யுத்திகள் கையாள பட்டு இருக்கிறது.
கிரிக்கெட் என்பது ஒரு மனதளவில் நடத்தப்படும் போர் என்று பல வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது பேட்ஸ்மேன் எப்படி ஏமாற்றி விக்கெட்டுகளை எடுப்பது என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்.

அதே போல் பவுலர்களை எப்படி சமாளிப்பது ரன்களை தடுக்க காத்திருக்கும் பில்டர்களை எப்படி கையாள்வது என்பது பேட்ஸ்மேனின் சாமர்த்தியம். இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குலாப்தின் காயம் ஏற்பட்டது போல் நடித்து நேரத்தை கடத்தி ஆப்கானிஸ்தான் போட்டியை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான் நடத்திய மிகப்பெரிய யுக்தி என்று ரசிகர்கள் வர்ணிக்கும் நிலையில் தற்போது அதையே மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.