கிங்ஸ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாதின் நயிப் ஏமாற்று வேலை செய்ததாக ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா சூசகமாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
முன்னதாக சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது. அதனால், ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டது.. அடுத்த போட்டியில் வங்கதேச அணியை, ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும் என்ற நிலை இருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 115 ரன்கள் எடுத்தது.
