
ஆப்கான் தடுமாற்றம்
இதனைத் தொடர்ந்து ஹசருத்துலா ஷசாய் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஷாகின் ஆப்ரிடி கிளின் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து ரசூலி 3 ரன்களிலும், நஜிபுல்லா 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

பதிலடி தந்த ஆப்கான்
இதனைத் தொடர்ந்து இப்ராஜிம் ஷர்டான் மற்றும் முகமது நபி ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இப்ராஹிம் ஷர்டான் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். மறுமுனையில், முகமது நபி பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 51 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

ஆப்கான் 154 ரன்கள்
இறுதியில் உஸ்மான் கனி 20 பந்துகளில் 32 ரன்களை விளாச, ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. முதலில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்கள், பிறகு ரன்களை வாரி குவித்தனர். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

மழையால் ஆட்டம் நிறுத்தம்
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோரும் திணறினர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஓயிடு வீசியே 13 ரன்கள் கொடுத்தனர். பாபர் அசாம் 6 பந்துகளில் 6 ரன்களும், ரிஸ்வான் 8 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர். பாகிஸ்தான் அணி 2.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications