
ரொம்ப மோசம்
வங்கதேசத்திடம் இந்தியா தோற்ற பின்னர் அனைவரும் டோணியைக் குறி வைக்கிறார்கள். இது மிகவும் மோசமானது. நான் வருத்தமாக உணர்ந்தேன். டோணிக்காக நான் அனுதாப்படுகிறேன்.

இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு
இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு வழக்கமாகி விட்டது இது. ஹீரோக்களை சட்டென்று காலில் போட்டு மிதிப்பது இங்கு வழக்கமாகி விட்டது. குறிப்பாக சாதனைகள் படைத்த கேப்டன்களுக்கே அதிகம் நிகழும் இது.

என்னதான் சாதித்தாலும்
என்னதான் சாதனைகள் படைத்திருந்தாலும் ஒரு மோசமான தோல்வி அதை மறக்கடித்து விடுகிறது. மீடியாவும் இதில் இணைவதுதான் சோகமானது. அவர்கள் பொறுப்போடு நடக்க வேண்டும்.

விமர்சிக்கலாம்.. ஆனால்
ஒரு வீரரை விமர்சிக்கலாம். ஆனால் அவர் கடந்த காலத்தில் செய்தவற்றையும் பாருங்கள். இப்போது சந்தித்த ஒரு தோல்வியை மட்டும் வைத்துக் கொண்டு அவரை விமர்சிக்காதீர்கள். அது நியாயமற்றது.

டோணி சாதாரண ஆளா
டோணியைப் பாருங்கள். அவரது சாதனைகளைப் பாருங்கள். இந்திய அணிக்காக, இந்தியாவுக்காக எத்தனை பெருமைகளைத் தேடிக் கொடுத்துள்ளார் அவர். அவரது சாதனைகளே அவரது திறமையைப் பறை சாற்றுமே.

அருமையான அணியாக மாற்றியவர்
இந்திய அணியை மிகச் சிறந்த அணியாக மாற்றியவர் டோணி. கிடைத்த வீரர்களை வைத்து பல அற்புதங்களை செய்து காட்டியவர். பேட்டிங்கில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











