டெல்லி: கிரிக்கெட் வீரர் டோணியை அடுத்து சுரேஷ் ரெய்னாவும் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு நச்சென்று பதில் அளித்துள்ளார்.
கேப்டன் டோணி தன்னிடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து கேள்வி கேட்ட வெளிநாட்டு பத்திரிக்கையாளரை தனது பக்கத்தில் அமர வைத்து அருமையான பதில் அளித்தார். நான் ஃபிட்டாக இல்லை என்று நினைக்கிறீர்களா, 2019ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாது என்று நினைக்கிறீர்களா என்று டோணி அந்த பத்திரிக்கையாளரிடம் கேட்க அவரோ இல்லை என்றார்.

அப்படி என்றால் உங்கள் கேள்விக்கு பதில் அளித்துவிட்டேன் என்றார் டோணி. இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை பார்த்து இந்திய பயிற்சியாளர் அல்லது வெளிநாட்டு பயிற்சியாளரில் யாருக்கு முன்னுரிமை அளிக்கிறீ்ர்கள் என்று கேட்டார்.
அதற்கு ரெய்னா கூறுகையில்,
சொந்த மனைவி சவுகரியமா இல்லை அடுத்தவருடைய மனைவியா என்று கேட்க அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.