
நாளை துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நாளை துவங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் கேப்டன் விராட் கோலி. அதையடுத்து அவர் தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்புகிறார். வரும் ஜனவரியில் அவர் தனது குழந்தையை எதிர்பார்ப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

விராட் இல்லாத டெஸ்ட் போட்டிகள்
பகலிரவு போட்டியை விளையாடவுள்ள கோலி அதையடுத்து திட்டமிடப்பட்டுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் இல்லாத இந்த போட்டிகளை துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையேற்று நடத்தவுள்ளார். கோலி இல்லாத இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கோலி பாராட்டு
இந்நிலையில் தான் இல்லையென்றாலும் அணியை ரஹானே சிறப்பாக வழிநடத்துவார் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ, பிசிசிஐயின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தங்கள் இருவருக்குள்ளும் சிறப்பான புரிதல் உள்ளதாகவும் பல தருணங்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஹானேவிற்கு தெரியும்
கடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ரஹானே சிறப்பாக செய்லபட்டதை சுட்டிக் காட்டியுள்ள கோலி, இந்திய அணியின் வலிமை குறித்து அவருக்கு நன்றாக தெரியும் என்றும் பாராட்டியுள்ளார். மேலும் ஒருவரை மட்டுமே நம்பி அணி இல்லை என்றும் குழுவாக செயல்பட்டே வெற்றிகளை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெற்றி பெறுவதே திட்டம்
தாங்கள் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாகவும் தான் இல்லாத அணியை ரஹானே தன்னுடைய தனிப்பட்ட திறன் மற்றும் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக வழிநடத்துவார் என்றும் விராட் கூறியுள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதை மட்டுமே ஐடியாவாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











