
கைது வாரண்ட்
பின்னர் மேல் விசாரணையில் எந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாதததால் மீண்டும் ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த வழக்கு, கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்க வந்தது. அப்போது, ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சரணடைய உத்தரவு
ஆனால், ஷமி வெளிநாட்டில் இருப்பதால் 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், அவரது சகோதரரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு கொல்கத்தா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

கைது நிறுத்தம்
இந் நிலையில், கைது வாரண்ட்டை அலிபூர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து ஷமியின் வழக்கறிஞர் சலீம் ரகுமான் கூறி இருப்பதாவது:

நவம்பர் 2ல் விசாரணை
ஷமி மீதான கைது வாரண்டுக்கு அலிபூர் நீதிமன்றம் 2 மாத காலத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். எனவே, கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார் ஷமி.


Click it and Unblock the Notifications











