சென்னை : இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.
இதையொட்டி சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு கோவிட் -19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
நேற்றைய தினம் சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் 6 நாட்கள் குவாரன்டையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.