
லீக் சுற்று
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தான் பரபரப்பு சண்டை நடந்தது. சௌராஷ்டிரா அணி இன்னிங்ஸின் 9வது ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு பரோடா அணிக்காக ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது ஜாக்சனின் உடற்மொழி மற்றும் செயல்பாடுகள் ராயுடுவை சீண்டியுள்ளன.

என்ன காரணம்
வேண்டுமென்றே பந்தை எதிர்கொள்வதற்காக ஷெல்டன் ஜாக்சன் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் போட்டியும் தாமதித்துக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்பத்தி ராயுடு நேராக ஷெல்டனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஷெல்டனும் பதிலடி கொடுக்க தவறவில்லை.

என்ன நடந்தது
இருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக சென்று வாக்குவாதம் செய்தனர். கையில் பேட்டையும் வைத்திருந்ததால் பதறிப்போன சக வீரர்களும், கள நடுவர்களும் உடனடியாக சென்று இருவரையும் பிரித்தனர். பின்னர் சமாதானப்படுத்தி போட்டி நடத்தப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வென்றது யார்?
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய சௌராஷ்டிரா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. இதில் அம்பத்தி ராயுடு டக் அவுட்டும், ஷெல்டன் ஜாக்சன் 17 ரன்களும் விளாசியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











