For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இத்தோட நிறுத்திக்கணும்; இல்லேன்னா..." அமீரை எச்சரிக்கும் அக்தர் - என்ன நடந்தது?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கு முன்னாள் வீரர் சோயப் அக்தர் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அது என்னவென்று பார்ப்போம்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம் திடீரென தனது ஓய்வை அறிவித்தார். 29 வயதே ஆகும் அமீரின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முகமது அமீர் தற்போது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தங்கியுள்ளார்.

அவரது மனைவி இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், தான் இங்கிலாந்து குடியுரிமை பெறவுள்ளதாகவும், அடுத்த 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பதால், இங்கிலாந்து உள்நாட்டு அணியில் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும் அமீர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், அணியில் தான் ஓரம் கட்டப்படுவதாகவும் அமீர் குறித்து செய்திகள் வெளியாகின.

 இங்கிலாந்து குடியுரிமை

இங்கிலாந்து குடியுரிமை

இந்த சூழலில், அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அப்போதும் கூட அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார். எனவே, அமீரும் ஐபிஎல்-லில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 இன்னும் வளரணும்

இன்னும் வளரணும்

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் சோயப் அக்தர் PTVக்கு அளித்த பேட்டியில், "சில நேரங்களில் உங்களுக்கு நல்ல நாட்கள் அமையும், சில சமயங்களில் உங்களுக்கு மோசமான நாட்களும் அமையும். தன்னை பாதுகாக்க மிக்கி ஆர்தர் எப்போதும் இருக்க மாட்டார் என்பதை அமீர் உணர்ந்திருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்பதை காட்டுகிறீர்கள். இதை அமீருக்காக சொல்கிறேன். நீங்கள் இன்னும் வளர வேண்டும்.

பாடம் படிக்கணும்

பாடம் படிக்கணும்

அணியின் நிர்வாகம் உங்களுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால், நீங்கள் உங்களது செயல்திறனையும் உழைப்பின் அளவையும் உயர்த்த வேண்டும். பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஹபீசுக்கு எதிராகவும் செயல்பட்டது. ஆனால் ஹபீஸ் என்ன செய்தார்? ரன்களை குவித்தார். வேறொன்றும் செய்யவில்லை. ஹபீஸிடம் இருந்தும் அமீர் பாடம் கற்க வேண்டும்" என்று சற்று காட்டமாகவே பேசியுள்ளார்.

 நேர்மாறான கருத்து

நேர்மாறான கருத்து

முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில், "அமீர் மிகவும் அனுபவம் வாய்ந்த பவுலர். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த பவுலராக விளங்குகிறார். அவர் பாகிஸ்தானின் உலக டி20 அணியில் இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன். சமீப காலமாக அமீர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் யாரும் தலையிட உரிமை கிடையாது. மற்ற வீரர்களும் தான் ஓய்வு பெறுகிறார்கள். ஏன் அவர்களைப் பற்றி பேசாமல், இவரை மட்டும் பற்றியே பேசுகிறீர்கள்?" என்று பேசியிருந்த நிலையில், அக்தர் அதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 26, 2021, 18:11 [IST]
Other articles published on May 26, 2021
English summary
Amir Should Stop Relying on Mickey Arthur - முகமது அமீர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+