
இந்திய நடுவர்
இப்போட்டிக்கான கள நடுவர்களில் ஒருவர் சுந்தரம் ரவி. அவரும், இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்தும் கள நடுவர்களாக பணியாற்றுகின்றனர். இதன் மூலம் இந்தியா, இங்கிலாந்தின் பெயரும் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போட்டியில் இடம் பெற்று விட்டது.

ஜூன் முதல்
சுந்தரம் ரவி கடந்த ஜூன் மாதம் ஐசிசியின் எலைட் நடுவர்கள் குழுவில் இணைந்தார். இது அவருக்கு 10வது டெஸ்ட் போட்டியாகும். 2013ம் ஆண்டு முதல் இவர் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

25 ஒரு நாள் போட்டிகளில்
சுந்தரம் ரவி 25 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டுவென்டி 20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரவமாக உணர்கிறேன்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகல் இரவுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றுவது குறித்து சுந்தரம் ரவி கூறுகையில், மிகவும் கெளரவமாக உணர்கிறேன். இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய பிசிசிஐக்கு நன்றி் என்றார்.

இவங்களும்தான்
இவர்கள் தவிர இங்கிலாந்து நடுவர் நிகல் லாங் 3வது அம்பயராக உள்ளார். ஆஸ்திரேலியாவின் சிமோன் பிரை ரிசர்வ் நடுவராக உள்ளார். இலங்கையின் ரோஷன் மகானமா போட்டி நடுவராக உள்ளார். இவர்களுக்கும் வரலாற்றில் இடம் கிடைத்துள்ளது.

138 வருஷமா
கடந்த 138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்பது முக்கியமானது. இளஞ்சிவப்பு நிற பந்து இந்தப் போட்டிக்காக பயன்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications











