யார் யார்
கோஹ்லிக்கு தற்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது. அதேபோல் இந்திய வீரர் புவனேஷ்வர் குமாருக்கு சில நாட்களுக்கு முன் திருமணம் ஆனது. இந்த நிலையில் கோஹ்லி, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோரின் மனைவிகள் தென்னாப்பிரிவிக்காவிற்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளராக இருக்கிறார்கள்.
நண்பர்கள் ஆனார்கள்
தற்போது இந்த நான்கு பெரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டத்திற்கு அனுஷ்கா சர்மாதான் தலைவி எனப்படுகிறது. மேலும் இவர்கள் தென்னாபிரிக்கா முழுக்க சுற்றி ஷாப்பிங் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
சாப்பாடு
தற்போது இதனால் வீரர்களை ரசிகர்கள் மோசமாக கலாய்த்து வருகிறார்கள். அதில் ''கோஹ்லி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக அனுஷ்காவுடன் மதிய உணவு சாப்பிடுவது குறித்து கவனம் செலுத்த கூடாது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முடிந்தது
இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். முக்கியமாக கோஹ்லி பயிற்சி செய்யாமல் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டு இருந்தார். இதனால் இவர் ''கோஹ்லியின் ஹனிமூன் இதோடு முடிந்தது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications