
பிசிசிஐ பபுள்
ஐபிஎல்-ல் ஏற்பட்ட கொரோனா பிரச்சினை, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இந்திய அணி வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் பயோபபுளில் உள்ளனர். இந்திய அணி கேப்டன் கோலி மும்பையில் தான் வசித்து வருகிறார் என்பதால், வீட்டு தனிமையில் இருந்துவிட்டு, அவர் சமீபத்தில் தான் பபுளில் இணைந்தார்.

இன்ஸ்டா உரையாடல்
இந்நிலையில் மிகவும் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி, கிரிக்கெட் என சுற்றி வந்த விராட் கோலிக்கு பபுளில் டைம் பாஸ் ஆகவில்லை போல. இதன் காரணமாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்களில் பல்வேறு கேள்விகளுக்கு கோலி பதிலளித்த நிலையில், அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா திடீரென உரையாடலுக்குள் நுழைந்தார்.

அனுஷ்காவின் குறுக்கீடு
ரசிகர்களை போலவே அனுஷ்கா சர்மாவும், கோலியிடம் கேள்வி ஒன்றை கேட்டார். ஆனால் அது சற்று வித்தியாசமானது. அதில், எனது ஹெட்போன்ஸை எங்கே வைத்து விட்டு சென்றாய் என கேட்டார். இதற்கு பதிலளித்த விராட் கோலி, படுக்கைக்கு அருகில் உள்ள டேபிளில் தான் எப்போதுமே இருக்கும் அன்பே என வேடிக்கையாக பதிலளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதயம் போன்ற எமோஜியையும் அவர் அனுப்பியுள்ளார். அவர்களின் இந்த உரையாடல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

நெகிழ்ச்சி பதில்
இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர், விராட் கோலியிடம் அவரின் மகள் வாமிகாவின் புகைப்படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த கோலி, வாமிகா என்பது கடவுள் துர்கையின் மறுபெயராகும். எனவே வாமிக்காவுக்கு சமூக வலைதளம் என்றால் என்ன என்பது புரியும் நாள் வரை அவளை சமூக வலைதளங்களில் காண்பிக்க மாட்டோம். என் மகளே சொந்தமாக முடிவு எடுக்கும் போது தான் சமூக வலைதளங்களில் தோன்றுவார் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











