
தடுமாறிய வீரர்கள்
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. வேகப்பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்ததும், ஹர்திக் பாண்டியா சுழற்பந்துவீச்சை மாற்றினார். இதற்கு நல்ல பலன் கிடைக்க, வாசிங்டன் சுந்தர் ஓவரை எதிர்கொள்ள நியூசி வீரர்கள் தடுமாறினர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்
ஃபின் ஆலன் 35 ரன்களும், மார்க் சாம்மேன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வாசிங்டன் சுந்தர் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கிளன் பிலிப்ஸ் மற்றும் பின் ஆலன் ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 200 ரன்களை நியூசிலாந்து தொடும் என எதிர்பார்த்த நிலையில், குல்தீப் யாதவ் தனது அபார பந்துவீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தார்.

149 ரன்கள்
கிளன் பிலிப்ஸ் 17 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுணையில் நெருக்கடி அதிகரிக்க சிஎஸ்கே வீரர் கான்வே 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பிரஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே அடித்தது.

இமாலய இலக்கு
இதனையடுத்து கடைசி ஓவரை ஆர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் பந்து நோ பாலாக வீச, டேரல் மிட்செல் சிக்சர் அடித்தார்.இதனையடுத்து அடுத்த 2 பந்திலும் சிக்சர்களும், பவுண்டரியும் பறக்கவிட அந்த ஓவரில் மட்டும் நியூசிலாந்து அணி 27 ரன்களை அடித்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications