
4வது டெஸ்ட்
இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ள இந்தத் தொடரில் முக்கியமான 4வது டெஸ்ட் இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய, ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பிரித்து மேய்ந்து விட்டார். இதனால் முதல் இன்னிங்ஸை 60 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா.

இந்திய - பாக். நடுவர்கள்
இந்தப் போட்டியின் நடுவர்களாக இந்தியாவின் எஸ்.ரவியும், பாகிஸ்தானின் ஆலிம் தர்ரும் செயல்படுகிறார்கள். இது ஒரு அரிய நிகழ்வாகும்.

எலைட் நடுவர் ரவி
49 வயதான ரவி சமீபத்தில்தான் ஐசிசியின் எலைட் குழுவில் இடம் பெற்றார். அதேசமயம், ஆலிம் தர் பல போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் படைத்தவர்.

97 டெஸ்ட்
தர் 97 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ரவிக்கு இது 8வது போட்டியாகும். 2013ம் ஆண்டு ரவி தனது முதல் டெஸ்ட் நடுவர் பணியை ஆற்றியிருந்தார்.

5வது நிகழ்வு
டெஸ்ட் வரலாற்றில் இந்திய, பாக் நடுவர்கள் இணைந்து பணியாற்றுவது இது 5வது முறையாகும். கடைசியாக 2009ம் ஆண்டு டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது இந்தியாவின் அமீஷ் சஹேபா மற்றும் ஆலிம் தர் இணைந்து பணியாற்றியிருந்தனர்.


Click it and Unblock the Notifications











