ரிஷப் பண்ட் சொதப்பல்
ஒரு கேப்டனாக நல்ல கம்பேக் கொடுத்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக படுமோசமாக சொதப்பியுள்ளார் 5 போட்டிகளில் வெறும் 57 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் ஷாட் தேர்வுகளும் மோசமாக உள்ளன. எனவே அவரை நிச்சயம் டி20 உலகக்கோப்பைக்கு சேர்த்தே தீர வேண்டுமா, அவரை நீக்கிவிடுங்கள் என ரசிகர்களும், வல்லுநர்களும் கூறி வருகின்றனர்.
நெஹ்ராவின் கருத்து
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் அஷிஷ் நெஹ்ரா பேசியுள்ளார். அதில், " ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய டி20 அணி விளையாடுமா என கேள்விகள் உலா வருகிறது. ஏன் அது முடியாதா??. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. நிச்சயம் அவர் அணியில் இடம்பெறுவார் என எந்தவொரு முத்திரையும் பதிக்கவில்லை. அவருக்கும் காயங்கள் ஏற்படலாம். உலகக்கோப்பைக்கு முன்னதாக 10 டி20 போட்டிகள் மற்றும் ஆசியக்கோப்பை தொடர் உள்ளது.
மாற்று யார்?
பண்ட்-ஐ முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். முதலில் சொதப்பிய போது வெளியேற்றப்பட்டார். ஆனால் மீண்டும் வந்து தனக்கென தனி தடத்தை உருவாக்கிக்கொண்டார். எனினும் அவர் தனது டி20 கிரிக்கெட் ரன்களை நினைத்து கவலைப்படுவார். பண்ட்-க்கு மாற்றாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர் என நெஹ்ரா கூறியுள்ளார்.
டிராவிட்டின் பதில்
பண்ட்-கான வாய்ப்பு குறித்து பேசிய டிராவிட், டி20 உலகக்கோப்பைக்கான எனது திட்டத்தில் ரிஷப் பண்ட் தான் முக்கிய பங்காக இருக்கிறார். மிடில் ஓவர்களில் அவரின் அதிரடிகள் தேவை. எனவே ஓரிரு போட்டிகளை வைத்து அவரை புறக்கணிக்க மாட்டோம் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.